2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே  தண்ணீர் குழாயை திறந்தவிடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

விருதுநகர் அருகே உபயோகத்தில் இருந்து அடைத்த தண்ணீர் குழாயை திறந்த விடக்கோரி ஊராட்சி தலைவரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:43 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே உபயோகத்தில் இருந்து அடைத்த தண்ணீர் குழாயை திறந்த விடக்கோரி ஊராட்சி தலைவரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் பாவாலி ஊராட்சி சேர்ந்தது கோட்டைப்பட்டி தெரு. ஆனைக்குட்டம் அணையிலிருந்து விருதுநகருக்கு வரும் குழாய் இணைப்பு மூலம் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இக்குழாய் தண்ணீரை திடீரென அடைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனே தண்ணீர் குழாயை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர்-சிவகாசி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்கள் சென்றனர். அப்போது, தகவலறிந்து வந்த ஊராட்சி தலைவர் நாகராஜை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது, இப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் இக்குழாய் நீரையே நம்பியுள்ளனர். அதனால் அடைக்கப்பட்டிருக்கும் குழாயை உடனடியாக திறக்க வேண்டும் என்றனர். அதையடுத்து ஊராட்சி தலைவர் உடனே தண்ணீர் குழாயை திறக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.